Tamil
Call +44 208 151 0039
கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நிமலராயூ சாருமதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
என் வாழ்வின் வெளிச்சம் நீயே இருந்தாய்,
என் நெஞ்சின் துடிப்பு நீயே ஆனாய்…
நீ இல்லா வீடு வெறுமையாய் தோன்றும்,
நீ விட்ட பாசம் நெஞ்சில் தங்கி நிற்கும்.
ஒவ்வொரு நாளும் உன் நினைவு நிழலாய்,
ஒவ்வொரு சுவாசமும் உன் பெயராய்…
நீ பிரிந்தாலும் உன் சிரிப்பு சத்தம்,
இன்னும் என் மனதில் இசையாக ஒலிக்கும்.
இன்று 31ம் நாள் நெஞ்சம் நெகிழும்,
நினைவுகள் மட்டும் உயிராய் விளங்கும்.
அன்புடன் வந்த அனைவருக்கும் நன்றி,
ஆறுதலாய் தந்த வார்த்தைகள் என்றும் நினைவு.
துயரத்தில் துணைநின்ற நண்பர்கள் எல்லாம்,
இறைவனின் அருளால் நலமுடன் இருப்பீர்கள் என்றும் வாழ்த்துகின்றோம்.
அவளின் ஆன்மா சாந்தியடையட்டும்,
எங்கள் நெஞ்சில் என்றும் அவள் நிலைத்திடட்டும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், ownstorytamil.com ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு தினம், ஆன்மீக நிகழ்வுகளுடன் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை
எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

8-Jan-1997 | 26-Sep-2025
08 Jan 1997 - 26 Sep 2025